பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலையினைத் தாழ்த்திக் குப்பன்
சான்(று)என வந்தோன் சொல்வான் :
"கொலைசெய்தாள் கொல்லே மேட்டில்
தமிழச்சி ; கண்ணுல் பார்த்தேன்;
மலேப்புற மாக மாலே
குப்பனும் நானும் வந்தோம் ;
கொலேயினைக் கண்டோம் ;
நாங்கள் கூவினுேம் ; வந்தார் மக்கள். 119


" 'பொன்னன்பாப் பாத்தி யோடு
புது உற(வு) ஆனான் என்று
முன்னமே என்னி டத்தில்
முன்னமே என்னி டத்தில்
தமிழச்சி முணுமு ணுத்துச்
சொன்னதுண்டு;அதனால் இன்று
கொலைசெய்யத் துணிந்தாள் போலும்!’’
என்றனன். தீர்ப்புச் சொல்வோர்,
இருக்கலாம் ; உண்மை ' என்றார் ! 120

பழிவாங்க வேண்டும் என்று
காலத்தைப் பார்த்தி ருந்த
இழிநெஞ்சர் அவ்வூர் மக்கள்
'இதுநல்ல செவ்வி' என்றே
குழுமினர் மன்றத் துள்ளே !
தமிழச்சி மீது குற்றம்
விழுந்தது! சிறைக்கூ டத்தே
விலங்கிட்டுத் தள்ளி னார்கள் ! 121

                
48