பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் 16

தமிழச்சி மீட்கப்பட்டாள்

உமிழ்கின்றான் பரிதி காலை
பொற்றுகள் உயிர்கள் மீது;
கமழ்மலர் புல்லும் பூண்டும்
ஆயிரம் கதிர வன்காண்!
தமிழச்சி மீட்கப் பட்டாள்;
சேரியின் மன்றம் சார்ந்தாள்!
"எமதன்னை வாழ்க! வாழ்க!"
என்றனர் சேரி மக்கள்.150

தமிழச்சி காலில் வீழ்ந்தாள்
பாப்பாத்தி; தலையைத் தாழ்த்தி,
"எமதன்னை வாழ்க!"என்றாள்;
எல்லோரும் முழக்கம் செய்தார்!
"நமைவாட்டி வந்த காலம்
நலிந்ததே!" என்றான் வீரன்;
"அமைதியாய் இருங்கள்’’என்று
தமிழச்சி அன்பாய்ச் சொன்னாள்.151

59