பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிள்ளையைப் பெற்(று)எ டுத்த அங்குள்ள பெண்கள் எல்லாம் வெள்ளத்தை,நிலம்,வானை வெய்யோனைத் தமிழால் வாழ்த்தி பள்ளத்துப் பூவும் நெல்லும் மெய்யெலாம் தூவிப் பாடி உள்ளத்தே மாற்றம் இன்றி, ‘வாழ்ந்திட! உயர்க!' என்றார்!

                        171

விருந்தினர்க்(கு) எல்லாம் சோறு மிகுபாலை வார்த்துத் தந்தார்; அருந்தின்ர்; சிறிது நேரம் அயர்ந்தனர்; வள்ளு வன்தன் திருக்குறள் விளக்கம் அங்குச் செய்(து) ஒரு புலவர் மற்றும் விருந்தொன்று செவிக்குத் தந்தார்¡ தமிழ்மணம் வாழ்க மென்மேல்¡

                        172