பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல் 18
தமிழச்சி கண்ட நாடு

உருவானது, அடடா! நாடு
தமிழச்சி உரைத்த தைப்போல்!
திருநாட்டு மக்கள் எல்லாம்
திறமுற்ற மக்கள் ஆனார்!
வருவாய்க்கங்(கு) அளவே இல்லை!
மகிழ்வோடு வாழு கின்றார்!
திருநாடு காட்டாய் எங்கும் -
திகழுதல் காண வாரீர்!

173

ஆண்டியும் அரசும் இல்லை!
அவசரச் சட்டம் இல்லை!
வேண்டிய(து) அவர்அ வர்க்கு
விருப்பம்போல் கிடைக்கும்! மன்றம்
ஆண்(டு)இல்லை வழக்குத் தீர்க்க!
அச்சமோ இல்லை! நெஞ்சில்
மூண்டிடும் காமம், வஞ்சம்
முளைப்பதற்(கு) இடமே இல்லை!

174

68