பக்கம்:தமிழஞ்சலி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி ருப்பவர்கள், அறிஞர் அண்ணாவால் தெளிவு பெற் றார்கள். உலகத்திலுள்ள 96 மூலப் பொருள்களைப்போல், தத்துவத்திலுள்ள 96 அம்சங்களும், அண்ணாவால் பொலிவு பெற்றன. அந்த வான் பறவை, என்று குன்றேறி நின்று குரல் கொடுத்ததோ - அன்றே, அறிஞர் அண்ணாவைப் பற்றி அகிலம் அறிய ஆரம்பித்தது! என்னைப்போல், இன்ப துன்பங்களைக் கவனியாமல், அண்ணாவை நெருங்கிப் பார்த்தாலொழிய, இந்தப் பேருண்மைகளைக் காணமுடியாது! காணாதவர்கள், அந்த கிராம மக்களைப்போல் அறி விருந்தும் அறியாதார். கண்டவர்கள், அப்பேருண்மையை மற்றவர்கட்கு விண்டிடும் ஆற்றலுடையவர்கள்! குறிப்பு : விஞ்ஞான உலகத்தில் ஒரு பெரும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பிறகு, இப்பொழுது ஒரு பேருண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். உலகம் தோன்றியது முதல், இதுவரையில், ஒரு விண்மீனின் ஒளி, நிலத்தை நோக்கி இன்னும் வரவில்லை. ஒரு நொடிக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் மைல் வேகத்தில், அதன் ஒளியலைகள் பாய்ந்து வந்தாலும் - அக்குறிப்பிட்ட விண்மீனின் ஒளி, இன்னும் நிலத்தை அடையவில்லை. 91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/101&oldid=863442" இலிருந்து மீள்விக்கப்பட்டது