பக்கம்:தமிழஞ்சலி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி பெரிய மனதால் எதிரியையும் ஆட்கொள்ளும் அரிய பிறவி நீ; பேணும் தொண்டர்கட்குப் பெரியவன் நீ! என்றென்றும் மாறா இன்பம் நீ எழிலார்ந்த காட்சி நீ! எண்ணங்களைச் சிறையிடா ஏந்தல் நீ! எந்நாடும் தலை வணங்கும் இனிய பண்பாளன் நீ! பேராயிரம் பரவி, புவியார் வாழ்த்தும், எமது அண்ணன் நீ! பிரிவிலாத தோழர்கட்கு தேர்வாய் நின்ற பயன் நீ! அரச தந்திரத்தின் ஊற்று நீ! மக்களை ஏய்க்கும் நோய்க்கும் மாமருந்து நீ! வஞ்சம் அல்லை! கயமை அல்லை நீ! வன்கொடுமை நெஞ்சம் அல்லை நீ! மயக்கமல்லை! புதிருமல்லை நீ! குழப்பம் அல்லை! நஞ்சும் அல்லை! நா. சறுக்கி வீழ்வானும் அல்லை நீ! நப்பாசை அல்லை! பேராசை அல்லை! நாச நினைப்புமல்லை நீ! தஞ்சமென வீழும் நோஞ்சான் அல்லை! பிறிதும் அல்லை! அல்லை நீ! சிந்தனையின் சிகரமே நீதான்! உனது எல்லை அறிவின் எல்லை! | 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/126&oldid=863469" இலிருந்து மீள்விக்கப்பட்டது