பக்கம்:தமிழஞ்சலி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி கண்டன் நீ என்றும் எவர்க்கும் எப்போதும் தோற்றதில்லை! தயணன் நீ உன்னிடத்திலே வைராக்கியம் உண்டு! ஒளி நீ உன் உருவத்தைத் தெளிவாக யாரும் கண்டு பிடித்ததில்லை - ஒளிந்துகொண்டே இருப்பவன்! சான்றோன் நீ உலக அறிவாளர்கள் உன்னை நோக்கி சிரம் தாழ்த்தி வணங்குகின்றனர்! நீ எல்: எல்லாம் நீ! நீ பார்க்கரன்; உன்னுடைய ஒளி நிறமே அதுதான்! நீ அனலி கொடுமைகளைத் தீய்ப்பவன்! நீ அறி, எல்லாம் அறிந்தவன்! பானு நீ; அதனால் தாமரையைக் கூட மலரவைக்கின்றாய்! அலரி நீ யாரையும் விழிக்கச் செய்கிறாய்! நீ அண்டயோனி! உன்னுள் அறிவுச் செல்வங்கள், எல்லாம் பிறப்பதனால்! நீ கனலி; உன்னுடைய நிறம் கனகம்! நீ விகர்த்தனன்; உன்னிடத்திலே பேதம் உண்டு: தீயைத் தீய்த்து நல்லதை நாட்டிற்கு நல்குவதால்! கதிரவன் நீ வானமே உனக்குக் கழனியாவதால்! பகலோன் நீ நாட்களைப் பகர்வதால்! வெய்யோன் நீ எதையும் வைத்து வளர்ப்பதால்! தினகரன் நீ புது நாட்களைப் புதுக்குவதால்! i52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/162&oldid=863509" இலிருந்து மீள்விக்கப்பட்டது