பக்கம்:தமிழஞ்சலி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி கண்கலங்கிக் கொண்டிருக்கும் சீவனைக் கண்டு பிடிக்கிறான். உறவு முறைகள் - பழுதுபட்டு அங்கங்கே உதிர்ந்து போகிற நேரத்தில், அந்த ஒளியால் சிதறியதை, மனிதன் பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியும். நெடுந்துாரத்திலிருந்து, ஒளி கொடுக்கின்ற சூரியனிட மிருந்து, சூடு வருகிறது. ஆனால், நெடுந்துரத்திலிருக்கின்ற நிலாவிடம் இருந்து - சூடு வருவதில்லை. இந்த வித்தியாசம் ஏனென்று, புரிகிறதா? உலகத்தில் சிலர், அணுகுகிற நேரத்தில் கொதித்துக் கொண்டுமிருப்பார்கள் - குளிர்ந்து கொண்டும் இருப் L FTស្មៅ மனிதன், விழித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் அவனுக்குச் சூரியனையும் - உழைத்து, அலுத்த நேரத் தில், அலுப்புக் கேற்றபடி நிலாவையும், நான் படைத்தேன். நிலா, கடலைக் கூத்தாடச் செய்கிறது. நிலவுக்கு, இந்த உலகத்தைத் தூங்க வைக்க முடியும். தனது வாழ்நாளை இந்த உலகம், நிம்மதியில் கழிக்க வேண்டுமென்பதற்காக, கோடிக்கணக்கான தாரகை களோடு, வருகின்ற பெரிய உள்ளம் படைத்தது நிலா. சூரியனுக்குக் கை எடுப்பதுபோல, நிலவுக்குக் கையெடுக்க - இந்த சமுதாயம் ஏன் மறுக்கிறது? 168

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/178&oldid=863526" இலிருந்து மீள்விக்கப்பட்டது