பக்கம்:தமிழஞ்சலி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அதிலே, ஓர் இரகசியம் இருக்கிறது: பகலவனை வணங்குகின்ற நேரத்தில், மனிதன் விழித்துக் கொண்டிருக்கிறான். நிலவைப் பற்றி நினைக்கின்ற நேரத்தில், மனிதன் பாதித் தூக்கத்திலே இருக்கிறான். மென்மையான தென்றலின் தேர் மேலேறி பயணம் வருகின்ற இராக்கால மவுனம் - நிலவைத் தன்மீது குடையாகப் பிடித்துக் கொண்டு வருகிறது. உலகத்தின் நடவடிக்கைகளை முழுமையாகக் காணவேண்டுமென்றால், இரவு நேரம் சரியான நேரமாகும். பெரிய மனிதர்களின் போலி வேஷமும் - சந்தர்ப்பவாதிகளின் - கொட்டமும் - சாகசத்தின் முழு உருவமும் கட்டவிழ்த்த குதிரையாக ஓடுகின்ற நேரம் - இராக்காலமாகும். அந்த நேரத்தில், பொதுவாக மனிதப் பண்பு பலவீனமடைகிறது. மனிதனுடைய சுய உருவம் - தெரிய ஆரம்பிக்கின்ற நேரத்தில், சிரித்த முகத்தோடு பார்ப்பது நிலாவாகும். அந்த நிலவை நாம் போற்ற வேண்டும். அது தத்துவத்தில் இருந்தால், அதனைப் புத்தம் என்று அழைப்போம்.

  1. 69
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/179&oldid=863527" இலிருந்து மீள்விக்கப்பட்டது