பக்கம்:தமிழஞ்சலி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அது இழுக்கின்ற பிராணவாயுவில் - மக்களின் சக்தி இருக்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தை முதல், பழையதாகப் போகின்ற மனிதன் வரை - அதன் பெருமைக்குச் சாட்சியாக இருக்கிறார்கள். ஏற்றத் தாழ்வென்ற படிக்கட்டுகளிலே ஏறி, அது சரிந்து கீழே விழுந்ததில்லை. அந்த நிலவைக் கோபப்படுத்திப் பார்த்தாலும், அது கொதிக்கின்ற சூரியனாவதில்லை. பூமியில் இருக்கின்ற சில அராஜக எரிமலைகள், அதன்மீது தீக்குழம்புகளை வாரி இறைத்தபோதுகூட, நிலா சூட்டினால் - வெடிப்பு விடுவதில்லை. பொறுமையின் எல்லைக் கோட்டில், அந்த நிலா நின்று கொண்டு, அடக்கத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி - நடந்து கொண்டிருக்கின்ற கரு முதல் கல்லறை வரையில் துன்பத்தால் அமர்ந்து கொண்டிருக்கின்ற மனித சமுதாயம், நிலவை நம்பியே - தன்னுடைய வாழ் நாளைத் துவங்குகின்றது. வீசியடித்த புயல், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்தப் புயலுக்குப் பெயர் மக்கள் எழுச்சி - அந்த எழுச்சிக்குக் கர்த்தா அறிஞர் அண்ணா என்ற வெண்ணிலா. ★女★★ 172

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/182&oldid=863531" இலிருந்து மீள்விக்கப்பட்டது