பக்கம்:தமிழஞ்சலி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அந்த அடிகளைத் தாங்க முடியாத மேகங்கள் அழ ஆரம்பித்தன: அதுதான் மழை! வானம் - தேம்பித் தேம்பி அழுதது! அதனை ஊமை மின்னல் என்று கூறுவார்கள்! அதோ மின்னல்! அதன் தோற்றம், காதலின் முதல் பார்வையிலே வெளி வந்த - ஒளி போல இல்லையா? உடனே இருள்! அது கூம்பிய காதலின் வடிவ மல்லவா? பிறகு மழை, உடைந்த காதலின் உப்பு நீர் தானே, அது? இப்போது - ஊரே பெருக்கெடுத்தோடுகிறது! எங்கும் வெள்ளக்காடு அலை பரப்பி ஒடை வடிவெடித்து, கால்வாய் வழியாக ஒடுகிறது - வெள்ளம்! அந்த வெள்ளப் பெருக்கின் மீது, மேலும் மழைத்துளிகள் விழுந்துகொண்டே இருக்கின்றன! ஜலதரங்க ஒசை தண்ணிர்க் கொப்பளங்களாகத் தோன்றிச் சிரிக்கின்றன! அக்கொப்பளங்கள் மீது வான் துளிகள் வீழ்ந்து உடைந்து, நீரோடு நீராகக் கலக்கின்றன! தப்பித்தது ஒரு குமிழி! சுழற் பெருக்கோடு, இடையிலே குமிழி மிதந்து செல்கிறது! தமிழன்னையே! தாயே! மலர்த்தேன் குட்டையிலே குளித்தெழுந்து வந்தவளே - நீ வாழ்க! I 74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/184&oldid=863533" இலிருந்து மீள்விக்கப்பட்டது