பக்கம்:தமிழஞ்சலி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி கூடியரோக நோயாளியின் உடலைப் போல, எலும்புருகி, சதை தளர்ந்து அவிழ்ந்து கிடக்கிறது! தாயே! இந்த நீர்க் குமிழித் தேகம் எனக்கு வேண்டாமம்மா! வானிலிருந்து இறங்கும் ஒவ்வொரு மழைத் துளியும் - என்னைக் காயப்படுத்துகின்றன! அந்தத் துளிகள், தன் காலால் என் தலையை உதைத்து உதைத்து மிதிப்பதைக் கண்டு, விளையாட்டுப் பிள்ளைகள் சிரிக்கிறார்கள் தாயே! பயங்கரவாதி சிரிப்பது போல், கீற்றுவிடும் மின்னல் தீக்கோடு, என்னைச் சுண்ட வைத்து விடாதா? வீசுகின்ற புயற் காற்றில், என் உடல் விளாம்பழத்தின் ஒட்டைப்போல் - விரிசல் விடாதா? வாழை மரத்தில், குத்திவைத்த இரும்புக் காரைப்போல் - துருப்பிடித்துப்போன என் எதிர் நாட்கள், வீரர்கள் கையில் இருக்கும் வாளைப் போல, பளபளப்பாகத் தோன்றும் நாள் எந்நாள்? தத்துவ விளக்கத்திற்காக என்னைப் படைத்து விட்டு, நீ மேகக் குதிரை ஏறிப் போகின்றாய்! சோகப் பாதையில் நான், போய்க்கொண்டிருக்கிறேன். எனது வயல்கள், முட்டாள்களின் சிந்தனையைப் போல சாவியாகச் சாய்ந்து கிடக்கின்றன. கதிர்மணிகளில் சப்பட்டை நெற்களே மிஞ்சியிருக் கின்றன. I 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/186&oldid=863535" இலிருந்து மீள்விக்கப்பட்டது