பக்கம்:தமிழஞ்சலி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ான். வி. கலைமணி இந்தத் தத்துவ முப்பட்டைக் கண்ணாடி வழியில் தெறித்து விழுந்த வண்ணச் சிதறல், அண்ணாவில் புதைந்திருக்கின்ற ஆற்றொழுக்கான பண்புகளை நமக்கு விளக்கிக் கொண்டிருக்கின்றன. இப்போது அவர் ஆண்டவன் கைதி அரசாங்கக் கைதிகளுக்காக வருந்திக் கொண்டிருக்கிறார். காலத்தைப் பறக்கும் மீன் என்றுகூடக் கூறலாம். அது ஊழிக்கடலில் துள்ளியெழுந்து - அங்கேயே மறுபடியும் விழுகிறது. நிலத்திற்கு அது வருவதில்லை. அண்ணாவும் ஊழியில் தோன்றி அங்கேயே ஒடுங்கினார். நிலத்திற்கு இனி திரும்பவே மாட்டார். நான் என் உடைகளைக் களைந்து எறிந்துவிட்டேன். நான் இப்போது நிர்வாணி! உடையில் குற்றமிருந்தால் என் பொறுப்பு! நிர்வாணத்தில் குற்றமிருந்தால் நித்தியன் பொறுப்பு இது அண்ணாவின் கடைசி தத்துவ விளக்கம். அவர் போட்டிருந்த உலகச் சட்டையை, உரிந்து போட்டுவிட்டார். அவருக்காகப் பாடிவந்த பறவைகள், ஆளில்லாத காரணத்தால் - தத்தம் குஞ்சுகட்கே பாடுகின்றன. அவருக்காகப் பூத்த மலர் யாருடைய சட்டைக்கோ செல்கிறது. 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/23&oldid=863576" இலிருந்து மீள்விக்கப்பட்டது