பக்கம்:தமிழஞ்சலி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அறிஞர் அண்ணாவும் அரசியலில் முரடர்களை மிருதுவாக்கி, வழவழப்பாக்கிப் பக்குவப்படுத்தினார். குறுக்கே வந்த தடைகளைத் தாவிக் குதித்தார்! நீர்வீழ்ச்சி இப்போது ஆழமான இடத்தில் விழுந்ததால் தண்ணிர்ப் பூவை அங்கே மலர வைத்தது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கின்ற நீர்ப் பள்ளம் - அங்கே ஆடிச் சிரிக்கும்; மேடு தெறிக்கும்! இது உண்மை! அண்ணா மிகவும் ஆழமானவர்! அதனால் சிரித்தார்! வண்ணக் கதிர்களை எண்ணச் சிதறல்கள் என்பார்கள்! இப்போது வண்ணக் கதிர்கள் நீர்த்துளிகளின் நெருக்கத்தில் பாய்கின்றன. நீர்த்துளி பறக்க ஆரம்பிக்கிறது. துணுகியச் சிதறல்கள் அருகிலிருக்கும் புற்கள் மீது படிகின்றன. அத்தனையும் வைரத் துரசுகள்! அவை தண்ணிப் பிஞ்சுகள்! பிஞ்சு, தாய் வீழ்ச்சியைப் பார்த்து சிரிக்கிறது! ஒய்வெடுக்கவா சென்று விட்டாய்? என்று - நீர்வீழ்ச்சி கேட்கிறது. வண்ணப்பற்கள் காட்டித் தண்ணிப் பிஞ்சு தலை யாட்டுகிறது! 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/34&oldid=863588" இலிருந்து மீள்விக்கப்பட்டது