பக்கம்:தமிழஞ்சலி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி என்னே தம்பி, "உலகே மாயம்! ஊதாவின் உரை கேட்டே இவ்வாறு ஒடிந்து விட்டாயே!” நான் நவிலவிருக்கின்றவற்றைக் கேட்டால் என்னா வாய். என்று நயமுடன் இடித்துரைத்தது! 女★京★ செந்துார மலர்! சிரித்துக் கொண்டே செந்தூர மலர் தன் சிந்தனை வளையத்தைச் சுழல விட்டது: முத்துக்கடல் தொட்டு மிளிரும் தொடு வானம்! அதில் செக்கச்செவேலென்ற செந்தூர வடிவம்! அப்போது திக்கை வெளுப்பாக்கத் தோன்றுகின்றக் கதிரவனைக் காணும்போது, அவ்வடிவத்தால் ஊற்றி மெழுகியிருக்கும் என் பெயர் தான் செந்தூர வண்ணம். அருணனை மாயமென்றறையும் நீ, அண்ணாவின் புறப்படையின் முன்பு உதயசூரியனை மாயை என்று உரைப்பாயோ! இஃதே போல இனியும் வெளியே இயம்பாதே என்று செந்தூர மலர் செப்பக் கேட்டேன்! என்னைப் பழைய நிலைக்குக் கொண்டு வர, நான்பட்ட பாடு எனக்கன்றோ தெரியும்! ★★★★ 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/46&oldid=863601" இலிருந்து மீள்விக்கப்பட்டது