பக்கம்:தமிழஞ்சலி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி நீலக்குவளை மலர்! ஒடை ஓரத்தில் ஓங்காரச் சிரிப்பொலியை நொடியில் நான் கேட்டேன்! மலர் சிரிப்பா இது! என்ற வியப்பால் நிமிர்ந்து பார்த்தேன்! மேடைப் பூங்காற்று மோதியந்த மலர் மீது தாதை உலுக்கி விட்டுத் தாண்டிச் சென்றது. அம்மலருக்குப் பெயர் அழகுத் தமிழ்ப் பாவை வந்து கொஞ்சுகின்ற நீலக் குவளை! அழைத்தாயா குவளையே, என்று நான் அருகில் சென்றேன்! எட்டாத தொலைவிலிருக்கும் இந்த வானத்தின்கண் ஒளிரும் நிறம் கருநீலம். ஆழ்கடலின் நிறமும் அதுவே! வானத்தை மாயமெனில், வாரியினை மாயமெனில், ஞாலத்தில் எது உண்மை நவில்வீர்! கருநீலம் உள்ளதெல்லாம் கண்ணுக்குத் தெரிந்தாலும், தொட்டுப் பார்த்தவரோ தொல்லுலகில் யாருமில்லை! விசும்பை அளந்தறியோம்! ஆழியை அளந்தறியோம்: அளவுக் கடங்காது! அள்ளவள்ளக் குறையாது! களவதனை எவரும் செய்யார் இந்தக் காட்சிக்குக் கருப்பொருளாய் வந்த கரு நீலம்: ஆழத்தின் இலக்கணமாகும்: 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/47&oldid=863602" இலிருந்து மீள்விக்கப்பட்டது