பக்கம்:தமிழஞ்சலி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி சிரம் பழுத்த தென்னாட்டுப் பேரறிஞன் அறிவாழத்தை மரம் மட்டைகள் கணக்கிட்டு அறிந்திடுமோ! உரமுள்ளேர் எத்தனை பேர் அவரை நெருங்கினர்: நின்றெரியும் அவரின் அறிவை உண்டு எத்தனையோ பேர் ஊர் போனார் என்று உனக்குத் தெரியாது? கத்தும் கடல் குடித்தான் குறுமுனிவன்! கன்னித் தமிழ்க் குடித்தார் இந்தப் பேரறிஞர்! குறள் படித்த இந்த மூதறிஞன் விரல் தொட்ட இடமெல்லாம் இலக்கியத்தின் விளக்கங்கள்! அன்னோன் அறிவாழம் கண்டார் - யார்? ஆழத்தின் நிறங்கண்டார், மவுனத்தில் தான் ஆழ்ந்தார்: அன்னவரை நோக்கி ஓடிவிட்ட எதிரியின் உயிரெல் ೩೨fftB; மீண்டும் திரும்பாமல் 'மீளவழி தேறாமல், பூண்ட அன்புச் சிறைக்குள்ளே பூட்டப்பட்டிருக்கும் வரலாற்றைக் கண்டாயா? இத்துணையும் அறியாத நீ - கரு நீலம் மாயை என்றால்: கை கொட்டி நகையாதோ தரணி! அறிவை மாயம் என்போன் - அது இலான் தம்பி; அது இலான்! ஆழத்தின் நிறங்காட்டும் கரு நீலம் மாயமில்லை என்பதை நீ உணர்ந்து, உன்னைத் தெளிவாக்கி நட, என்று கூறி முடித்தது குவளை மலர்! 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/48&oldid=863603" இலிருந்து மீள்விக்கப்பட்டது