பக்கம்:தமிழஞ்சலி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி 'மஞ்சள் பெட்டிக்கே மகத்துவம் மணக்குது மகாத்மா வாக்கியம்! என்று காங்கிரசார் தேர்தல் ஆலாபனை பாடியது, ஏன்? அடிமை நோயைக் காட்டிட - அதனை அகற்றிட தேர்தல் வாயிலாக மக்களது வாக்குளைப் பெற்றிட! சுதந்திர தீபத்தை ஏற்றிடவன்றோ! பிணியுள்ள இடத்திலேதான் மருத்துவப் பேரறிஞர்கள் தத்தமது பணியைத் தொடங்குவது வழக்கம்! அண்ணனுடைய மஞ்சள் கொடியும் அது போன்ற தன்றோ! பண்புள்ளோர். அன்னோனின் சேவையைத் தொழுது வணங்கினர்! அஃதற்றோர்: நரம்பிலா நாவிற்கு வந்தவாறு பேசி: ஆர்ப்பரித்தனர். நோயைத் தீர்ப்பது மட்டுமே கடனன்று அவருக்கு உணர்ந்தார் இஃதை. வாய்மைப் பொன்மொழியாலே வடித்த மூலிகையின் சாரம் பிழிந்தெடுத்தார். ‘சாகக் கிடக்கும் சமுதாயமே - சற்றே பிழைத்தெழு! என்று மருத்துவம் புரிந்தார். அன்னவரின் எச்சரிக்கை பதாகையென ஏற்றிய கொடியின் நிறம்: 'மஞ்சள் தம்பி - மஞ்சள்! இன்னல் இடர்பட்டு, இருந்த பொருள் இழந்தனர் 1மக்கள். 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/60&oldid=863617" இலிருந்து மீள்விக்கப்பட்டது