பக்கம்:தமிழஞ்சலி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி "கருங்கால் வேங்கை மலரின் நாளும் பொன்னென வீசுமந்து" என்று புறநானூறு புகல்கிறது. பொன்நிறமான வேங்கைப்பூ நறுமணமிக்கது. பெண்கள் அதனை பெரிதும் விரும்பி கொய்யச் செல்வர். பறிக்கச் சென்ற பூவையர் அப்போது புலி புலி என்று பூசல் புரிவர். வேங்கையெனும் சொல் புலி என்ற மிருகத்தையும் குறிக்குமல்லவா? அதனாலே அம்மங்கையர் அவ்வாறு பூசல் செய்வர். ஆனால், அதற்கும் காரணமுண்டு. பூ மலர்ந்த வேங்கை மரம் புலியை ஒத்திருக்கும். அதனால் வேங்கைப் பூவினைப் புலிப்பூ என்பர் ւյոaԾ6ւIահ. வேங்கை மரத்தில் புலி போன்ற வண்ணப் புள்ளிகளோடு பூ மலர்கின்றன. "புலிப்பொறி வேங்கைப் பொன்னினர் கொய்து" என்று 'ஜங்குறுநூறு என்ற இலக்கியம் கூறுகிறது. புலி உரி இரிஅதற் கடுப்பக் கலி சிறந்த நாட்பூ வேங்கை நாள் மலர் உதிர' என்ற 'அகநானூறு' செய்யுள் அறிவிக்கிறது. ‘கருங்கால் வேங்கை வீயுகு துறுகள், இரும்புலிக் குருளையிற்றோன்றும் என்று குறுந்தொகையில்’ காணப்படுகிறது. 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/69&oldid=863630" இலிருந்து மீள்விக்கப்பட்டது