பக்கம்:தமிழஞ்சலி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி தினந்தோறும் ஒரு தவளை, நானிருக்கும் பக்கத்தில் வந்து அனலுக்கு ஒண்டும். அதை நீயும் தானே பார்த்தாய்! பாறையிலே தேங்கியிருக்கும் நீரில் ஒரு நாள் - அது முட்டைகளை இட்டது: தவளையை அதற்குப் பிறகு காணவில்லை! வெயில் காய்ந்தது! பாறை நீர் வற்றியது! எப்படியோ முட்டைகள் பாறையின் இடுக்கில் சென்றன: வசந்தமும் - கோடையும் மாறி மாறி வந்தன! ஒருநாள் பாறை திடீரென்று வெடித்தது! செத்துவிட்டேனோ, என்று அஞ்சினேன். காரணம்; என்மேல் சரிந்து அது வேறுபக்கம் விழுந்தது. தாயே! இது என்ன சோதனை: இறுகிய பாறை எப்படி இளகி வெடித்தது? இப்போதுதான் புரிகிறதம்மா எனக்கு! தவளையைப் போல் நீரிலும் இல்லாமல், நிலத்திலும் இல்லாமல், நிலையற்றவர்கள் - கட்டுக் குலையாத ஒர் அமைப்பில் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்தேன்! மன உறுதி படைத்தவராக மக்கள் இருக்க പേജ@മ என்ற கருத்தையும் பெற்றேன்! நிலையற்ற உள்ளம் படைத்தோர், தன்னல முட்டை களை இடுவரேயானால், அன்பால் இறுகிய பாறை - தேரையின் உயிர்ப்பால் பிளக்கும்! 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/86&oldid=863668" இலிருந்து மீள்விக்கப்பட்டது