பக்கம்:தமிழஞ்சலி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அப்பெரிய அமைப்பின் கீழ் - பூண்டாக இருக்கும் பாமரர், நசுங்கி நலிய ஏற்படும் என்பதை, என் மூலம் உணர்த்துகிறாயா? தாயே! நீ இருக்கும் போது நாங்கள் ஏன் நலியப் போகிறோம்! உன் பார்வைதான் எம்மை அடிக்கடி மனிதனாக்கிவர அறிவுரையாக உதவுகிறதே! எங்களுக்கு நீ எவ்வித குறை நிறைகளையும் வைக்க வில்லையே! ஒன்றுபட்டு வாழ - உனது பாசமெனும் உணர்ச்சியை வேறு, ஊட்டி விட்டாயே அம்மா! தாயே! எனது வாழ்நாளில் என்னை எத்தனை உருவங்களாக அமைத்தாலும்; உனது எண்ணத்தையே நான் எங்கும் எதிரொலிப்பேன்! பாலைவனத்தில் சிறு மணலாக என்னை ஆக்கு: கோடியில் ஒருவனாகச் செய். உன் கை வண்ணத்தின் சிறு உருவம் நான்! கடலோரத்தில் கிளிஞ்சலாக என்னை உலவ விடு. உன் கலைத்திறனின் உருவமாகக் காட்சியளிப்பேன். மலையென என்னை ஆக்கு. உன் வான்புகழை ஏந்திக் கொண்டே இருப்பேன். நீ இயற்கையில் இளமையோடிருப்பவள். நான், உன் அமைதியில் பிறந்தவன்! மோனத்தில் கருவானவன்! 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/87&oldid=863670" இலிருந்து மீள்விக்கப்பட்டது