பக்கம்:தமிழஞ்சலி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அதுபோல, இழுக்கு அழுக்கால் இன்னல் துன்பத்தால் வழக்காய் வாடிக்கொண்டிருக்கும் இந்த வியனுலகம் - ஆனந்தக் கூத்தாடுவதைக் கண்டேன்! அந்த கிராம மக்களது கூச்சல், இப்போது சிறிது அடங்கியது: நாடகம் முடிந்த அரங்கமும் - ஆட்டம் முடிந்த இடுகாடும், அமைதியைத்தான் வைத்துக்கொண்டிருக்கும். பறவை, மலையின் உச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது! பறப்பன - ஊர்வன எல்லாம், இப்போது தலை து.ாக்கிப் பார்த்தன! பூமியிலிருக்கும் எல்லா தாதுப் பொருட்களும் - உயிரினங்கள் அனைத்தும், பூரித்து வெளியில் வந்தன! இப்போது பறவை, உச்சியின் மீது தத்துவம் கூறும் ஞானியைப்போல, மிக அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தது! தன்னுடைய அலகால், இறகுக்கிடையில் இருக்கின்ற தினவைப் போக்கிக் கொண்டது! சிலிர்த்த இறகுகளை மேல் நோக்கி நிறுத்தி, ஜீவக்காற்றால் -தன் களைப்பைப் போக்கிக் கொண்டது. கிராமத்து மக்கள் ஓடிவந்தார்கள். தன்னந் தனியனாய் -தானும் அமைதியாய், நின்று கொண்டிருக்கும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். 88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/98&oldid=863693" இலிருந்து மீள்விக்கப்பட்டது