பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

43


சுற்றமும் துணையும் சூழ்ந்து
சோற்றுக்கா யுழைப்போர்க் குள்ளே
ஒற்றுமை யுணர்ச்சி ஓங்கும்
உயிர்துடிப் பொன்றுண் டாயின்,
மற்றவை யனைத்து முற்று
மகிழ்ந்துநாம் வாழ்தல் உண்மை!
வெற்றிநம் முடைய தன்றே
வேதனை பிறர தென்றே!

இந்தத்தத் துவத்தை யேற்ப
இதயத்தி லிருத்தி யெண்ணிச்
சிந்தித்துத் தெளிவீர்! செல்வர்
சீர்கேட்டைச் சினந்து பேசி
நிந்தித்துப் பயனென் றில்லை
நிலைமாற்ற நினைப்பீர்! நிற்க,
மந்தித்தல் மறந்து, செல்க!
மனத்திட்ப மெய்தற்” கென்றே.