69
பெண்ணின்சொல் கேட்டுப் பெண்கள்
பிடிப்பாகச் சிரித்தும், பேசாக்
கண்ணனின் கருத்தைக் கண்ட
காளையர், கடியுங் காலங்
குண்னுணும்நல் லுணவும் கூட
உண்மையில் சுவையும் குன்ற,
எண்ணின கண்ண னேற்ப
இயம்பினுன், எளிய மாற்றம்:
'பொன்னையோ, புனுகை யோ, பூப் போட்டபொன் வண்ணச் சேலை தன்னையோ, - தருதல் தக்க தாகாது! தரணி காண, என்னையோர் தட்டத் திட்டின், றெடுத்தொரு பரிசாய், என்றன் மன்னியே! மகிழ நீயே மல்லிகைக் களித்தி" டென்றே ,
"பெரும்போடு போட்டான்; பெண்ணின் பேச்சுப்பை பிய்ந்து போச்'சென் றரும்பாடு பட்டா ரன்றங் கனைவரும், அகம்பீ ரிட்டு வாம்போடிக் கடக்கும் தத்தம் வாய்ச்சிரிப் படக்க! வாய்த்த கரும்பாடிச் சாறு பாகாய்க் கற்கண்டாய்க் கடித்தார்ப் போன்றே.
"மறிமாறி யூட்ட வந்தால் மதிமாறும் . ஆடும்! மாலை, தறிமாறிப் பசுவும் தங்கின், தடுமாறும் கன்றும்! தந்தை, குறிமாறிக் குடும்பப் பாங்குக், குணம்மாறி வழக்கைக் கூட்டி நெறிமாற, நிறைந்த செல்வம் நிலைமாற,__ நின்றே னின்றே.