பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தமிழர் தோற்றமும் பரவலும்


புதிய கற்கால மனிதர் என்பார் தக்கிணத்திற்குப் புகழ் சேர்க்கும் கருப்புக் கல்லைப் பயன்படுத்தியவர் ஆவர். வெளிறிய நிறம் வாய்ந்த படிகக்கல் அவர்களை ஈர்க்கவில்லை. மேலும், அப்படிகக்கல், கரடுமுரடானதும் எளிதில் பிளக்க முடியாததும் ஆகும். திருவாளர் புட் அவர்கள் திரட்டி வைத்திருக்கும் புதிய கற்காலக் கருவிகள் ஓர் ஆயிரம் மாதிரிகளாம். அவற்றை வகைப்படுத்தியதில் தனிச் சிறப்பு வாய்ந்த, கலைத்தொழில் வேலைப்பாடு அமைந்த 78 இனங்களை அவர் கண்டுள்ளார். அவற்றுள் 41 பண்படுத்தப்பட்ட மெருகேற்றப்பட்டவை. ஏனைய 37 மெருகேற்றப்படாதவை. பச்சைநிற மரகதக்கல், படிகக் கூட்டமைப்பு வாய்க்கப் பெறாத செறிவான களிமக்கல் போலும் வண்ணக்கற்களையும் போலவே வண்ணம் தீட்டப்பெற்ற மட்பாண்டங்களும், வழக்கத்தில் வந்துவிட்டன. கிரீட் கிரீஸ் மற்றும் பிற மேலை நாடுகளைப் போலவே தென் இந்தியாவிலும், புதிய கற்காலம், இரும்புக் காலத்தால் தொடரப்பட்டது. புதிய கற்காலத்து மூதாதையர், இரும்புக் காலத்தையும் கடந்து வந்தனர். படிக்கல் பாறையிலும், இரும்பு, நீண்டகாலம் இருக்கக்கூடியது. அதனினும் கடினமானது என அறிந்தனர். ஆகவேதான், புதிய கற்காலத்தைச் சேர்ந்த பழைய சிற்றூர்ப் புறங்களில், இரும்பு காலத்து மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தங்களை ஒத்த ஒரே நாட்டவராகிய சிந்து சமவெளிப்பகுதியில் வாழ்பவர், பித்தளை மற்றும் செம்பினை அறிந்தவராய் இருக்கும்போது, தென் இந்தியா, பித்தளையையோ, செம்பையோ, மேற்கொள்ளவில்லை. பித்தளை மற்றும் செப்பு நாகரீகங்களோடு கொண்ட தொடர்பின் விளைவாக, உலோகக் கலவையை உருவாக்கும் கலை, பெரும்பாலும் இரும்பு காலத்தின் பிற்பகுதியில் கற்கப்பட்டது. அப்படி என்றால், இரும்புக் காலத்தின் தொடக்ககாலம், கி.மு. நான்காவது ஆயிரத்தாண்டுக்கும் முன்னர்க் கொண்டு