இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாலாட்டு - 99 ______________________________
நாமத்தின் அழகுகண்டு நச்சுவாளாம் அத்தை மகன்.
குறிப்பு: பல் விளக்கும் குச்சி பனைமரம்-உயர்வு நவிற்சி.
உதவியவர்: இடம்: புலவர் இராம ராசன் வேலூர், சேகரித்தவர்: சேலம் மாவட்டம். கு.சின்னப்ப பாரதி
தாலாட்டு சாய்த்தாள் திருமுகத்தை
'வானர மதுரை' என்னும் மானாமதுரையை தங்கள் புராதனப் பிறப்பிடமாக தேவர், கள்ளர் என்னும் சாதியினர் கருதுகிறார்கள். தாங்கள் 'பாண்டியன்' உறவினர் என்றும் நம்புகிறார்கள்.
இத் தாலாட்டுப் பாடலில் தாய் வருங்காலம் பற்றி காணும் கனவொன்றைச் சித்திரமாகத் தீட்டுகிறாள். மானாமதுரையில் பிறந்த இச் சிறுவன் தனது தங்கைக்குச் சீதனமாக பிறந்த ஊரையும், வென்று கொண்ட மதுரையில் பாதியையும் விட்டுக் கொடுத்தான். மதுரைக்கருகே தல்லா குளம் என்றோர் ஏரி உள்ளது. அதனையும் சேர்த்து தனக்குச் சீதனமாகத் தரவில் லையே என்று தங்கை சிணுங்கிக் கொண்டு திருமுகத்தைச் சாய்த்துக் கொண்டாளாம். "அண்ணன் எது கொடுத்தாலும், இன்னும் அதிகமாகக் கொடுக்கமாட்டானா என்று ஏங்கும் தங்கை உனக்குப் பிறக்கப் போகிறாள். அவள் ஆசையை நிரப்புமளவுக்கு, நிறையப் பொருள் சேர்க்கவேண்டும்" என்று பேச்சுப் புரியாத குழந்தைக்குத் தாய் போதிக்க முயலுகிறாள்.
உச்சிமலைக் கந்தா, உயர்ந்த மலை வேல்முருகா சாய்ந்த மலைக்கந்தா என் சஞ்சலத்தைத் தீருமய்யா சீரார் சிலம்போசை, என் செல்வ மகன் காலோசை பாரச் சிலம்போசை, நீ பைய வா பாலகனே! மழை பெய்து தண்ணிர் வர, வாந்த மணல் ஓடிவர,