பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டு 127 சம்புருக் கொண்டாடா சம்புருக் கொண்டாடா சேகரித்தவர். இடம்: எம். பி. எம். ராஜவேலு மீளவிட்டான், தூத்துக்குடி வட்டம், திருநெல்வேலி மாவட்டம். விளையாட்டு ஐயன் கொம்பு தரையில் உட்கார்ந்து கால் பெருவிரலைக் கையினால் பிடித்துக் கொண்டு ஒருவன் கேள்வி கேட்பான். மற்றவர்கள் பதில் சொல்லுவார்கள். இப்பாடலுக்குப் பொருள் எதுவும் இல்லை. கே இதாரு கொம்பு?

ஐயன் கொம்பு

கே: ஐயன் எங்கே? பூப்பறிக்கப் போயிட்டான் கே: பூவெங்கே?

தண்ணியிலே கிடக்கு

கே: தண்ணி எங்கே?

ஆடு மாடு குடிச்சிடுச்சு

கே. ஆடு மாடு எங்கே? தி.: கள்ளன் கொண்டு போயிட்டான் தே: கன்னன் எங்கே? மரத்தில் இருக்கான் கே: வெட்டவா குத்தவா, வெண்ணித்தண்ணி ஊத்தலா? குறிப்பு: குழந்தைகளுக்கு கேள்விகளுக்கு சட், சட்டென்று பதிலளிக்கும் பழக்கத்தை இவ்விளையாட்டு உண்டாக்கும். திடீரென்று கேள்வியும் பதிலும் புதிது, புதிதாகத் தோன்றலாம். சேகரித்தவர்: இடம்: 8.S. போத்தையா விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.