பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176 தமிழர் நாட்டுப் பாடல்கள் வில்வ மரத்தோரம் விரிச்ச தலைப் பூ மணக்கும் கருத்தப் பொடி மணக்கும் கருத்தச் சாமி போற வழி ஒடையிலே ஒரனேறு ஒருத்தி மகன் கருத்தாற கருத்தாற வாய் திறந்தா கனக மணி ஓசையிடும் மஞ்சள் எடைக் கெடையாம் மரிக் கொழுந்து ரெண்டெடையாம் நானெ ணங்கும் சாமியிட்ட நல் குணங்கள் நாலெடையாம் அருணாக் கொடி அஞ்சி ருவா அதுக் கெசஞ்ச ஒடாணி ஒடாணி மின்னலுல ஒளி விடுதே உங்க தேகம் மஞ்சனத்திப் பலகை போல மார்படந்த என் சாமி நெஞ்சில் படுத்துறங்க நினைவு மெத்தத் தோணுதையா! மலையிலே பிரம்பு வெட்டி மலைக்குக் கீழே சிலம்படிச்சி தெரு மறிச்சுச் சிலம்படிக்கும் செல்லச் சாமி நம்மதுரை கம்பத்துத் துண்டுகளாம் கலர் கொடுத்த நேரியலாம் மலையாளத் துண்டுகளாம் மறக்க மனம் கூடுதில்லை மார்பிலே சந்தணமாம் மணிக்கையிலே தங்கக் காப்பாம் தங்கக் காப்பு போட்ட சாமி தய விருந்தாப் போதுமையா