பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

#84 தமிழர் நாட்டுப் பாடல்கள் ஆப்பிடு வாண்ணு சொல்லி அந்த ஆசை வய்யாதே வட்டார வழக்கு ஆப்புடுவா-அகப்படுவாள்; ஏலரிசி வாசகமே-விளிச் சொல். சேகரித்தவர். இடம்: 2 S.S. போத்தையா நெல்லை மாவட்டம். சந்தேகம் குடும்ப வாழ்க்கைக்குச் சந்தேகம் எதிரி அது குடும்ப ஒற்றுமையைச் சிதைத்துவிடும். ஆயினும், தமது சமூக வாழ்க்கையில் தவறுகள் நிறைந்து இருப்பதால் தம்பதிகளி டையே ஒருவர் மீது ஒருவருக்குச் சந்தேகம் ஏற்படுவது சகஜமாக இருக்கிறது. அதுவும் பெண்கள் தங்கள் கணவர்கள் குறித்த நேரம் தவறி வந்தால் சந்தேகப்படுகிறார்கள். இரவு திரும்புகிறேன்' என்று சொல்லிச் சென்ற கணவன் இரவில் வராவிட்டால், அவனை எந்தப் பெண் கைப்பற்றி விட்டாளோ? என்று கற்பனைக் கவலைகளால் மூழ்கிவிடுகிறாள். போனா இருக்க மாட்டார் பொழுதிருக்கத் தங்க மாட்டார் என்ன மனசிலெண்ணி இருந்தாரோ ராத்தங்கி துரையே துரைமகனே தோக்கலவார் வம்முசமே இடை சிறுத்தச் செல்லச் சாமி எவளெடுத்துக் கொஞ்சிறாளோ? மொச்சிக் கொழுந்தே நீ முழக்க முள்ள தாமரையே அல்லி மலர்க் கொடியே யாராலே தாமுசமோ தெற்குத் தெருவிலேயோ தேமலக்கா வீட்டிலேயோ செங்கக் கட்டி திண்ணையிலோ தங்கக் கட்டி நித்திரையே?