பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

221




                  மோதிரக்கையைக் கண்டேன் 
                  முகத்தழகை நானும் காணேன். 
                  நந்தவனம் துறந்து 
                  நானொரு நாள் பூவெடுத்து 
                  சூடல்லியே அந்தப்பூவை 
                  சும்மாவில்ல சொல்லுறாக 
                  தலையிலே தண்ணிக் குடம் 
                  தாகமெல்லாம் உங்கமேலே 
                  ஊரெல்லாம் ஓமலிப்பு 
                  ஒரு பலனும் நானறியேன் 
                  ஒரு மேனி ஒரு சிகப்பு, 
                  ஊரெல்லாம் ஓமலிப்பு, 
                  ஓமலிப்புக் கேட்டதுண்டு; 
                  ஒருபலனும் நானறியேன். 

வட்டார வழக்கு: ஓமலிப்பு- பரபரப்பு.

சேகரித்தவர்:
இடம்:
S.S. போத்தையா
நெல்லை.மாவட்டம்.

ஒன்றாகப் போவோம்

கிராமத்திலுள்ள இளைஞர்கள் மேல்காட்டுக்கு வேலைக்குச் செல்லுகிறார்கள். அவர்களில் ஒரு காதல் ஜோடி இரண்டு பேர் பின்தங்கிச் சென்றால், உற்றார் உறவினர் கேலி செய்வார்கள். எனவே அவர்கள் தனித்தனியே செல்லுகிறார்கள். நெருங்கி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே செல்ல வேண்டுமென்று இருவருக்குமே ஆசை. அவள் அவனை தனக்கு முன் போகும்படி சொல்லுகிறாள். அவனோ சேர்ந்து போனால் என்னவென்று கேட்கிறான். ஆனால் அவளுக்கு வெட்கமாக இருக்கிறது.

     பெண்: சீரிய சந்தனமே
             கிழக்கிருக்கும் சூரியரே 
             வாங்களேன் மேகாட்டுக்கு 
             வாசமுள்ள பூமுடிய
     ஆண்: மதுரை மருக்கொழுந்து
             மணலூருத் தாழம்பூவு 
             சேத்துரு செவந்திப் பூவு 
             சேர்ந்து வந்தால் ஆகாதோ? 

AS19 - 15