பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348 தமிழர் நாட்டுப் பாடல்கள் வட்டார வழக்கு: மவுத்தான-மகத்தான; மறநாடுமறவர்நாடு; மறுக்கா-மறுபடி; செல்லி-கிராம தேவதை ஒதறி-உதறி. உதவியவர்: இடம்: தங்கம்மாள் பொன்னேரிப்பட்டி, சேகரித்தவர்: சேலம் மாவட்டம். கு. சின்னப்ப பாரதி யாரெல்லாம் சாகவேண்டும்? உழவர் குடும்பமொன்றில், ஒரு பெண் கடினமான உழைப்பால், பணம் சேர்த்து, சிக்கனமாக குடும்பம் நடத்தி, மிஞ்சும் பணத்தில் கோழிகள், ஆடுகள், மாடுகள் முதலியன வாங்குகிறாள். அவளுடைய முயற்சியில், வீட்டிலுள்ள ஒன்றி ரண்டு பேர் ஒத்துழைக்கவில்லை. சோம்பியிருப்போர்களைப் பார்த்து உழைக்காமல் உயிர் வாழக்கூடாது, என்னும் கருத்தைக் குடும்பத் தலைவி வேடிக்கையாக வெளியிடுகிறாள். ஆத்தங்கரை தனிலே ஏலாலம்மிடி ஏலாலம் ஆடு ரண்டு வாங்கி வுட்டேன் ஏலாலம்மிடி ஏலாலம் ஆடு ரண்டும் நல்லாருக்க ஏலாலம்மிடி ஏலாலம் அத்தை மகள் சாகவேனும் ஏலாலம்மிடி ஏலாலம் கொளத்தங்கரை தனிலே ஏலாலம்மிடி ஏலாலம் கோழி ரண்டு வாங்கி வுட்டேன் ஏலாலம்மிடி ஏலாலம் கோழி ரண்டும் நல்லாருக்கு ஏலாலம்மிடி ஏலாலம் கொழுந்தனாரு சாக வேணும் ஏலாலம்மிடி ஏலாலம் மாத்தாங் கரைதனிலே ஏலாலம்மிடி ஏலாலம் மாடுரெண்டுவாங்கிவுட்டேன் ஏலாலம்மிடி ஏலாலம்