பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒப்பாரி

467

தங்கமலைக்காரன்
தனிச்சடிச்சாக் கேள்வியில்லை
பொன்னு மலையோரம்
புல்லறுக்கப் போனாலும்
பொன்னுமலை வேடர்கள்
புகுந்தடிச்சாக் கேள்வியில்லை
வெள்ளி மலையோரம்
விறகறுக்கப் போனாலும்
வெள்ளிமலை வேடுவர்கள்
விரட்டியடிச்சாக் கேள்வியில்லை


விதவையை யாரும் மதிக்கமாட்டார்கள். துணைவனோடு வாழும்போது அவளுக்குத் துணிவு இருந்தது. ஆதரவு இருந்தது. இப்பொழுது பழைய வேலைகளுக்கு அவள் போனால் அவளை யாராவது கொடுமைப்படுத்தினால் அவளுக்கு ஆதரவு யார்? எல்லோரும் இழிவாக கருதுவதனால் வேலைக்கு போகாமல் இருக்க முடியுமா? வேலை செய்தால்தானே கஞ்சி காய்ச்ச முடியும்?




அமங்கலி


வாழயிலை கொண்டு-ஒங்க
வளசலுக்கே போனாலும்
வாழலைக்குச் சாதமில்லை-ஒங்க
வளசலோட ஆசையில்ல
தேக்க இலைகொண்டு
தெருவோட போனாலும்
தேக்கிலைக்குச் சாதமில்லை-எங்க
தெருவோட ஆசையில்ல
அல்லியும் தாமரையும்
அடரிப் படர்ந்தாலும்
அல்லி பாக்க வந்தவுக-என்னை
அசநாட்டார் என்பாக
முல்லையும் தாமரையும்
முறுக்கிப் படர்ந்தாலும்
முல்லை பாக்க வந்தவுக-எனை
மூதேவி என்பாக
படியில் அரிசி கொண்டு
பழனிமலை போனாலும்