பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

480 தமிழர் நாட்டுப் பாடல்கள் மொற மெடுக்கப் பஞ்சையானேன் கனத்த மழை பேயும் கனிவாய்க் காத்தண்ணி வரும் கனிவாய்க் காதண்ணிக்குத்தா கடுகு சம்பா நெல் விளையும் கடுகு சம்பா நெல்லுக்குத்தான் கணக்காளியா நானிருந்தேன் கணக்கரு காலம் போக கடுகு சம்பா நெல்லுக்கு களங் கூட்டப் பஞ்சையானேன் வட்டார வழக்கு: மொளவு-மிளகு, மொறம்-முறம்; கணக்காளி-சொந்தக்காரி. குறிப்பு: விதவையின் நிலை கண்டு அண்ணன் தம்பி, அக்கா தங்கையர் யாரும் இரங்கவில்லை. அவளைக் காண வருவதில்லை. அவளைத் தங்கள் வீடுகளுக்கு அழைப்பது மில்லை. கணவன் வாழ்ந்தபோது அடிக்கடி விருந்தாளி வந்த சுற்றத்தார், அவனிறந்ததும் வருவதை நிறுத்தி விட்டனர். அவனா அவர்களுக்கு உறவு? உறவை ஏற்படுத்துவதும் செல்வம்தானே? கணவனோடு அவளுக்குச் செல்வம் போயிற்றல்லவா? அதை நினைத்து மனமுருகிப் பாடுகிறாள் விதவை. உதவியவர்: இடம்: செல்லம்மாள் சேலம் மாவட்டம் சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி சனத்தார் அறியாங்க இஞ்சி இலுமிச்சங்கா எளங்கொடி நார்த்தங்கா-நா எளப்பமாப் போறேண்ணு எனத்தார் அறியாங்க எம்பொழப்பைக் காணுங்க! தண்ணி எலுமிச்சங்காய் தனிக்கொடி நார்த்தங்காய் சனத்தாரு கண்ணெதிரே தனியாப் போனேன்னு சனத்தார் அறியாங்க தாம நிலை காணாங்க