பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தமிழர் நாட்டுப் பாடல்கள்



வண்ண முத்தாம் வரகுருவி
வாரிவிட்டா தோணியிலே,
மாரியம்மா தாயே, நீ
மனமிரங்கித்தந்த பிச்சை,
தற்காத்து நீகொடும்மா உன்
சன்னதிக்கே நான் வருவேன்.
வடக்கே யிருந்தல்லோ மாரியம்மா,
இரண்டு வடுகரோட வாதாடி
தனக்கிசைந்த எல்லை என்று மாரி
தனித்து அடித்தாள் கூடாராம்.

உச்சியிலே போட்ட முத்தை மாரி
உடனே இறக்கிடுவாள்,
முகத்திலே போட்ட முத்தை மாரி
முடிச்சா இறக்கிடுவாள்.
கழுத்திலே போட்ட முத்தை மாரி
காணாமல் இறக்கிடுவாள்.
பதக்கத்து முத்துக்களை மாளி
மாறாமல் இறக்கிடுவாள்.
நெஞ்சில் போட்ட முத்தை மாரி
உடனே இறக்கிடுவாள்.
தோளிலே போட்ட முத்தை மாரி
துணிவாக இறக்கிடுவாள்.
வயிற்றிலே போட்ட முத்தை மாரி
வரிசையாய் இறக்கிடுவாள்.
முட்டுக்கால் முகத்தை மாரி
முடித்திருந்து இறக்கிடுவாள்.
கரண்டக் கால் முத்தை மாரி
காணாமல் இறக்கிடுவாள்
பாதத்து முத்தை மாரி
பாராமல் இறக்கிடுவாள்.

ஐந்து சடை கொஞ்சிவர, மாரி
அழகு சடைமார் பிறழ,
கொஞ்சும் சடையிலேயே மாரிக்கு இரண்டு
குயில் இருந்து தாலாட்ட.
உன் பம்பை பிறந்ததம்மா
பளிங்குமாம் மண்டபத்தில்,
உன் உடுக்குப் பிறந்ததம்மா