பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாாி

549


 படுத்தும் பாடுகளை விளக்கியுள்ளன. அத்தகைய வகையைச் சேர்ந்தது இவ்வொப்பாரியும். தங்கை அண்ணனிடம் முறையிடுவதையும் அண்ணன் தங்கையைத் தேற்றுவதையும் உரையாட லாக இப் பாடல் கூறுகிறது:

ஆத்துத் திருகாணி
அலைச் செடுக்கும் பட்டாணி
அன்பிலா அண்ணியிடம்
அஞ்சாத தண்ணி கேட்டேன்
அண்டா இரவல் இண்ணா
ஆத்துத் தண்ணி தூரமின்னா
அதையும் மனதில் வச்சு
அண்ணனோடு சொல்லியழுதேன்
அழாதே தங்கையரே
ஆனை சிலம்பு தரன்
ஆறு லட்சம் பொன்னு தரன்
அழாதே தங்காயிண்ணான்-எனக்கு
ஆனை சிலம்பு வேணா
ஆறு லட்சம் பொன்னும் வேணா-உன்
அன்பான வாய் திறந்து
அனுப்பி வச்சால் போது மிண்னன்

வட்டார வழக்கு: அஞ்சாத-அஞ்சாது; இண்ணாஎன்றான்; தூரமின்னா-தூரம் என்றாள். தரன்-தருகிறேன்; போது மின்னன்-போதுமென்றேன்.

சேகரித்தவர்:

இடம்;

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

பொருத்தமில்லாத இடத்தில் பெண் கொடுத்தல்

ஒரு பெண்ணின் தாய் தந்தையர் பொருத்தமில்லாத இடத்தில் அவளை மணம் செய்து கொடுத்துள்ளதால், அவள் புருஷன் வீட்டில் பல அபவாதங்களை ஏற்றுக் கொள்ள நேரிடுகிறது. அவளை தகுந்த இடத்தில் மணம் செய்து கொடுத்தால் இந்த பேச்சுக் கேட்காமல் இருக்கலாமல்லவா? தந்தையின் மரணத்தின் போது அவள் இதை ஒப்பாரியில் வெளிப்படுத்துகிறாள்.