பக்கம்:தமிழர் மதம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் மாகப் பனிமலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட மத்திய தேசத்திலும், இறுதியில் ஆரியா வர்த்தம் என்னும் வடஇந்தியா முழுதும், பரவிய ஆரியர், வங்கத்திலுள்ள காளிக் கோட்டத்தை யடைந்த பின், காளி வணக்கத்தை மேற் கொண்டனர். பிரா மணனே காளிக்குக் கடா வெட்டும் பூசாரியு மானான். காளி- வ.காலீ. ஆரியர் சிந்து வெளியீ லிருந்த போதே, வேந்தன் வணக்க மாகிய இந்திர வணக்கத்தை மேற் கொண்டது முன்னர்ச் சொல்லப் பட்டது. வேதக் காலத்தின் இறுதியில், இந்திரனே தலைமை ஆரியத் தெய்வமானது கவனிக்கத் தக்கது. எ0 "The name of Indra is peculiar to India, and must have been formed after the separation of the great Aryan family had taken place, for we find it neither in Greek, nor in Latin, nor in German." -India, What can it teach us?(P. 182). "...We know from the Veda itself that there were sceptics, even at that early time, who denied that there was any such thing as Indra. - Herbert Lecturer.(P. 307). இந்திர வணக்கத்தையும் காளி வணக்கத்தையும் மேற் கொண்டும், சில பிராகிருத (வட திரவிட) மன்னரைத் துணைக் கொண்டும், வட இந்தியா முழுவதையும் அடிப் படுத்திய பின், ஆரியர் விந்திய மலை தாண்டித் தென்னாடு வந்தனர். மக்கட் குடியிருப்பு மிக்கில்லாத தண்டகக் காட்டையும், குடியிருப்பிலும் ஆட்சி முறையிலும், அதினுஞ் சிறந்த தக்கணத்தையும், படிப் படியாகக் கடந்து தமிழகம் வந்த பின், தலை சிறந்த நாகரிகத் தையும் நாட்டு வளத்தையும் தமிழுயர்வையும் இலக்கியச் சிறப்பையும் மூவேந்தர் செங்கோ லாட்சியையும் கண்டு, வியந்து வெஃகி, வட நாட்டில் தாம் கையாண்ட வழிகளையே தென்னாட்டிலுங் கையாண்டு முதற்கண் மூ வேந்தரையும் தம் அடிப்படுத்தத் திட்ட மிட்டு, அதன் படியே எல்லா வற்றையுஞ் செய்து வருவா ராயினர். (உ) ஏமாற்று வெப்ப நாட்டு வாழ்க்கையால் தமிழருட் பெரும் பாலார் கருத் திருந்ததையும், மூ வேந்தரும் முந்தியல் பேதைமை மதப் பித்தம் கொடைமடம் ஆகி ய முக் குணங்களைக் கொண்டிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/86&oldid=1428951" இலிருந்து மீள்விக்கப்பட்டது