பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தமிழர் வரலாறு சமஸ்கிருத ராஜாக்களால் ஆளப்பட்டது என்பதற்குத் திருவாளர் அய்யங்கார் காட்டும் பிறிதொரு காரணம், "காஞ்சீபுரம்" என்ற ஊர்ப்பெயரைக், கி. மு. 200 ஆம் ஆண்டைச் சேர்த்த பதஞ்சலி என்ற வடமொழி இலக்கண ஆசிரியர் உணர்ந்திருக்கவும், "காஞ்சி" என்ற அவ்வூர்ப் பெயர் பழந்தமிழ்ப் பாக்களில் இடம் பெறவில்லை என்பது. கி. மு. 200-இல் வாழ்ந்த பதஞ்சலி, மதுரையின் குடிமகன் எனும் பொருள் உடையதான "மதுராபுரக", உறையூரின் குடிமகன் எனும் பொருளுடையதான "உறகயுரக” என்ற சொற்களின் பிறப்பியல் முறைக்கு இலக்கணம் கூறாமல், காஞ்சீபுரத்தின் குடிமகன் எனும் பொருளுடையதான "காஞ்சீபுரக" என்ற சொல்லுக்கு மட்டுமே பிறப்பியல் இலக்கணம் வகுத்துள்ளார். காரணம், அந்நாட்களில், காஞ்சீபுரமே, சமஸ்கிருத நாகரிகத்தின் தென்கோடி எல்லைத் தளமாக அமைந்துவிட்டதுதான். அம்மாநகர் தமிழ் வழங்கும் நாட்டில் இடம் பெற்றிருப்பினும், அதற்கு என ஒரு தமிழ்ப் பெயர் இல்லை. "கச்சி" என்பது அதன் பெயராகக், கி. பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரும்பாணாற்றுப் படையில் (420) முதன்முதலாக இடம் பெற்றுள்ளது. ஆனால், அதுவும், இடையில் அணியும், அரைஞாண் அல்லது. ஒட்டியானம் எனும் பொருள் உடையதான "காஞ்சீபுரம்" என்ற தன் சுருங்கிய வடிவமாம் "காஞ்சி" என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். "காஞ்சியூர்” என்ற சொல், தமிழ்ப் பாக்களில், இடம் பெற்றுள்ளது என்றாலும், அது, காஞ்சி மரங்கள் நிறைந்த ஊர் என்ற பொதுப் பொருள் உடையதே அன்றி, காஞ்சீபுரத்தின் இயற்பெயரைக் குறிக்க வல்லதன்று" (பக்கம் : 322-23) என அவர் கூறியிருப்பது காண்க. கி. மு. ஏழாம் நூற்றாண்டினராய பாணினி, நர்மதை ஆற்றிற்குத் தென்பால் உள்ள எந்த நாட்டையும் குறிப்பிடா மைக்குத் திருவாளர் பந்தர்கார் அவர்கள், "பாணினி, பாண்டிய, சோழ, கேரள நாடுகளை அறிந்திருப்பாராயின், அவற்றின் சொல்லமைப்பு இலக்கணத்தைக் கூறமறந்த,