பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 தமிழர் வரலாறு காஞ்சியைத் தவிர்த்துத், தமிழகத்துப் பிற நகரங்களில், பிராமணர்கள், புத்தர்கள் சமணர்களின் குடியிருப்புக்களைத் தமிழிலக்கியத்தில், இப்போதுதான் முதன்முதலில் கேள்விப்படுகிறோம். (ஆசிரியன் இக்கூற்று உண்மைக்கு மாறானது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனின் புகழ்பாடும் மதுரைக் காஞ்சியில் மதுரை மாநகரைக் கவ்விக் கொண்டுவிட்ட ஆரிய நாகரிகக் குறிப்புக்கள் அடுக்கடுக்காகக் கூறப்பட்டுள்ளன. முதுகுடுமிப் பெருவழுதி உள்ளிட்ட பாண்டிய அரசர்கள் பற்றி ஆராயும் இதே நூலின், "பாண்டிய அரசர்கள்" என்ற தலைப்பிடப் பெற்றுள்ள 23 வது அதிகாரத்தில், இதே ஆசிரியர், மதுரை மாநகரத்தில் இடம் கொண்டுவிட்ட ஆரிய நாகரிகக் குறிப்புக்களை, மதுரைக் காஞ்சியிலிருந்தும், புறநானூற்றி லிருந்தும் அடுக்கடுக்கான எடுத்துக்காட்டுக்களை எடுத்து ஆண்டுள்ளார். பாட்டின் மற்றொரு பகுதியில், ஆரிய நாட்டு மாநிலங்களில் உள்ளது போலவே, காவிரிப்பூம்பட்டினத்தில், தாம் கற்ற பல்வேறு கல்வித் துறைகளிலும், முட்டறக்கற்ற முதறிவாளராம் வாதிகள், தம்மோடு வாதிடவல்லார் வருக என அறைகூவி அழைப்பதை உணர்த்தும் கொடிகள் நாட்டப்பட்டிருப்பது கூறப்பட்டுளது, ஆகவே, இக்காலத்தில், காவிரிப்பூம்பட்டினம் ஆரிய நாகரிகத்தின் மிகப்பெரிய மையமாக ஆகியிருக்க வேண்டும். - "பல்கேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர் - - உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்". - பட்டினப்பாலை : 169 - 171. அந்நகரத்து வணிகப் பெருமக்கள், வேதக் கடவுள்களாம் அமரர்களை வழிபட்டனர்; அவர்களுக்கு வேள்விகள் செய்து ஆவுதி அளித்தனர். (வேள்விகளில் பலியிடுவான் வேண்டி) ஆக்களையும், ஆனேறுகளையும் வளர்த்தனர்; நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணர்களைப் புகழ்ந்து பாராட்டினர்; ஆகவே, பிராமண வழிபாட்டு முறை அந்நகர மக்களிடையே பரவியிருந்தது.