பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 தமிழர் வரலாறு காண்டத்து இறுதிக்கண் வந்துள்ள கட்டுரையில், இவன், கோவலனைக் கொலை புரியுமாறு ஆணையிட்டு, அதனால் கண்ணகியால், சபிக்கப்பட்டு, அதன் விளைவால் உயிர் துறந்தவனாக குறிப்பிடப் பட்டுள்ளான். "வடவாரியர் படைகடந்து தென் தமிழ்நாடு ஒருங்கு காணப் புரைதிர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்." சிலம்பு : காண்டம் : 2 : கட்டுரை : 14 - 18. ஆனால், சிலப்பதிகாரம் மூலம், அவன் பெயரைக் குறிப்பிடவில்லையாகவே, கட்டுரைக் கண்வரும் இச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது இயலாது. அவன் பாடியதாக ஒருபாட்டு வருகிறது. "தன் ஆசிரியனுக்கு ஒர் இன்னல் வந்துபோது, அது தீர முன்சென்று உதவியும், மிக்க பொருளை வாரிக்கொடுத்தும், ஆசிரியனை வழிபடும் நிலையில் பெறுப்பு காட்டாது விரும்பி வழிபட்டும் கற்பது ஒருவனுக்கு அழகு. ஒரே தன்மையான பிறப்புடையராய், ஒரு தாய் வயிற்றில் பிறந்தாருள்ளும் அவர்களின் கல்வி - உடைமை இன்மைகளுக்கு ஏற்பத், தாயின் அன்பும் வேறுபாடும் ; ஒரே குடியில் பிறந்த பலருள்ளும், கல்லாமை யால் மூத்தோனை வருக என்றும் அழைக்காத அரசன் அவருள் அறிவுடையோன் சொல்வழி கேட்டுத் தன் அரசை நடத்துவன். பிறப்பால் வேறுபாடு காணும் நான்கு குலத்தி னுள்ளும் கீழ்க்குலத்தில் வந்தான் ஒருவன் கற்று வல்லனா யிருப்பின், மேற்குலத்தில் பிறந்தவன், இவன் கீழ்க்குலத்தான் என எண்ணாது அவன் பால் சென்று அவனை வழிபட்டு வாழ்வன்" எனக் கூறுகிறது அப்பாட்டு. "உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே, பிறப்போரன்ன உடன் வயிற்றுள்ளும்