பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

518

தமிழர் வரலாறு

குலத்துக் கரிகால் பெருவளத்தானையும் (அகம் : 141,) கிள்ளிவளவனையும் (அகம் : 205) அச்சோழர் குலத்தோடு உறவுடையவனும், காஞ்சியை ஆண்டவனுமாகிய திரையனையும் (அகம் : 340) அறிந்து பாராட்டியுள்ளார்.

சேரர், சோழர்களை, இவ்வாறு தனித்தனிப் பாக்களில் வைத்துப் பாராட்டியதோடு நில்லாமல், பாண்டியர் தலைநகர் கூடலைப் பாராட்டும் ஒரே பாட்டில் - "வழுதி கூடல்", சோழர் தலைநகர் உறந்தையையும்,- "அறங்கெழு நல்லவை உறந்தை", சேரர் தலைநகர் கருவூரையும், "திருமாவியன் நகர் கருவூர்" (அகம் : 93;) பாராட்டியுள்ளார்.

மேலே கூறிய இவர்களையே அல்லாமல், ஊணூர்த் தழும்பன் (அகம் : 227) வேள்பாரி (அகம் : 78) வேம்பி முசுண்டை (அகம் : 24) மூதில் அருமன் (நற் : 367,) சிறுகுடிவாணன் (நற் 340) ஆகிய குறுநிலத்தலைவர்களையும் சிறக்கப் பாராட்டியுள்ளார்.

தம்முடைய மதுரைக் காஞ்சியில், தலையாலங்கானப் போர் வெற்றியையும் (127-130) இருபெரு வேந்தர்களோடு, வேளிர்களையும் வெற்றி கொண்டதையும் (55-56). பாராட்டிய மாங்குடி மருதனார், அத் தலையாலங்கானப் போரில் வெற்றி கொள்ளப்படாத மிழலைக்கூற்றத்து எவ்வியை வெற்றி கொள்ள, செழியன் மேற்கொண்ட பிறிதொரு போரையும் குறிப்பிட்டுள்ளார். (புறம் : 24). செழியனால் வெற்றி கொள்ளப்பட்டாரைக் குறிப்பிட்ட அவர், அவனால், வெற்றி கொள்ளப்படாது சிறக்க வாழ்ந்த வாட்டாற்று எழினியாதனையும் பாடியுள்ளார். (புறம் : 396)

அதேபோல் ஆலங்கானத்தில் செழியன் பெற்ற வெற்றிச் சிறப்பைப் பாராட்டவே, அவன் அவை அடைந்து பாராட்டிய கல்லாடனார். (புறம் : 23, 25, அகம் : 209) அப்போரில் தோல்வி கண்டோர் வரிசையில் சேரரும் இடம் பெற்றிருக்க வும், அக்குலத்து வந்த களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், நன்னன் என்பானைக், குடநாட்டில், வாகைப்பெருந்