கி.பி. 600 க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்
467
பொருட்களைக் கொண்டு வந்திருக்கக் கூடும்.” (பக்கம் : 503) எனக்கூறுவது, வரலாற்று உண்மைகளைக் காண மறுத்துக் கண்மூடிக்கொண்டு கருத்தறிவிக்கும் வரலாற்று நெறியறியாதார் கூற்றல்லது, வேறு அன்று.
இனி, இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தே வில்பொறித்த வரலாறு குறித்து அளிக்கும் இலக்கியச் சான்றுகள் வருமாறு :
1)“வலம்படுமுரசின் சேரலாதன்
முந்நீர் ஒட்டிக் கடம்பறுத்து, இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து”
2)“ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித் தோன்”
3)“பேரிசை மரபின் ஆரியர் வணக்கி”
4)“கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்திலங்கு அருவியொரு நரந்தம் கனவும்,
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங்குமரி யொடு ஆயிடை
மன்மீக்கூறுநர் மறந்தபக் கடந்தே”
5)“கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல் எழுதிய புலியும் வில்லும்”