பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெண்மை?

43



செய்யவேண்டும் என்பதற்குப் பதில் இல்லையே! அவளும் துறவியாகப் போகலாமல்லவா? ஆம்! போகலாம், ஆனாலும் இந்தப் பொல்லாத சமுதாயம் தனியாகப் பெண்கள் சென்றால் 'சும்மா' இருக்குமா? இல்லாத கற்பனைகளையெல்லாம் கட்டி விடாதா? அதனால்தான் போலும் அப் பாடலைப் பாடியவர் பெண்களுக்கெனத் துறவைக் காட்டவில்லை. மேலும் மனைவி மாறுபட்டால் வேறொரு பெண்ணை மணந்துகொள்ளும் ஆடவர் சமூகத்தைக் கண்டு அவ்வாறு செய்வது தவறு என இடித்துக் காட்டவும் இப்பாடலைப் பாடி இருக்கலாம் அல்லவா? எண்ணுங்கள்! பெண்மையின் ஏற்றத்தைக் ஓம்புங்கள்.

—1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/45&oldid=1358271" இலிருந்து மீள்விக்கப்பட்டது