பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(மருத்துவம் சிறப்பு - - )ー 75

o சங்கத்தின் தலைவர், அமரர். டாக்டர் எஸ்.எஸ். ஆனந்தம் அவர்களால் பாராட்டப் பெற்றிருக்கிறது.

உயர்ந்த அறுவை மருத்துவ முறைகள் சித்த வைத்திய முறையில் உண்டு. என்பதைக் கண்டு கூறியவரும் அவரே.

அழிவு

தமிழ் மருத்துவ முறை அழிவதற்குத் தமிழ் மருத்துவர்களும் ஒரு வகையில் காரணராயினர். வறுமை வாய்ப்பட்ட மக்களிற் சிலர், தங்களை மருந்துவர் என்று சொல்லியும், தங்களிடமிருந்து மருந்து என்று கூறியும் தவறு செய்தமையால், பொதுமக்களின் நம்பிக்கை கெடத் தொடங்கியது. மருத்துவ நூல்களில் உள்ள கவிதைகளையும், அதில் மறைபொருளாகச் சொல்லப் பட்ட மருந்துகளின் பெயர்களையும் அறியாமலும் புரியாமலும் இளம் மருத்துவர்கள் சிலர் தவறு செய்யத் தொடங்கினர். இதனால் பொதுமக்கள் சிலர் சிறந்த பண்டிதர்களையும், உயர்ந்த மருத்துவர்களையும், அவர்களிடம் உள்ள தகுந்த மருந்துகளையும் சந்தேகிக்கத் தொடங்கினர். இவையும் சித்த வைத்திய முறை அழிவுக்குக் காரணம். -

புதைந்து போனது சித்த வைத்திய முறையில் சிறந்து விளங்கிய மருத்துவ மேதைகளும் பண்டிதமணிகளும் பலர், தங்களிடமுள்ள உயர்ந்த முறைகளை வெளியே காட்டாமலும், பிறருக்குச் சொல்லாமலும், தமக்குப்பின் வாரிசாக ஒருவரைத் தேர்ந்தெடுத்துச் சொல்லி வைக்காமலும், அரசினருக்கு அறிவிக்காமலும், நூல்களாக எழுதி