பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 —C تكتتكـ

பெயரில் இருந்தனவோ? அவற்றுள் என்னென்ன புதையல்கள் இருந்தனவோ? அவற்றின் ஆசிரியர்கள் யார் யாரோ? அறிய முடியவில்லை அவை அனைத்தும் இன்று இருந்தால்......? நினைத்தால் நெஞ்சம் புண்ணாகிறது. அழுதால் கண்களிலிருந்து இரத்தக் கண்ணிரே சொட்டுகிறது. என்ன செய்வது?

(Lp Lq-6) { இந்த நிலை மாறவேண்டும். மக்கள் சித்த வைத்தியத்தின் அருமை பெருமைகளை உணரவேண்டும். தாய்வழி மகள் வாய்வழி கேட்டுக் கை வைத்தியமாகச் செய்யும் முறை தமிழகத்தின் மலரவேண்டும்.மருத்துவத்திற்காகச் செலவழிக்கும் பெரும்பொருள் மிச்சப்பட வேண்டும். சிற்றுார்களிலெல்லாம் தமிழ் மருத்துவ மனைகள் திறக்கப்பட வேண்டும். சித்தவைத்தியப் பள்ளிகளும், கல்லூரிகளும் தமிழகத்தில் பெரும்பான்மையாகத் திறக்கப்படவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, சித்த வைத்தியத்திற்கு என ஓர் வாரியம் அமையவேண்டும். இதுவே தமிழக மக்களின் விருப்பம். இதை இன்று நமது தமிழக அரசு செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. - -

வாழ்க தமிழினம்! வளர்க தமிழ் மருத்துவம்!