擊 தமிழின் வெற்றி
அடடா! நப்பசலையாரை மறந்தே போய் விட்டோமே! அவருடைய பாடலை நாமே அல்லவா சொல்லும்படி கேட்டிருக்க வேண்டும்?' என் ருரர்கள். -
கிள்ளிவளவன் பெண்கள் பக்கம் திரும்பினன். 'தங்களே ஆடவர்கள் அடியோடு மறந்தே போய் விட்டார்களே !' என்ருன். *
' மறந்தாலும் கினேப்பூட்டுவது பெண்குலத்தின் இயல்பு' என்ருர் நப்பசலையார்.
'தாய்த் தன்மை என்பது அதுதானே?" என்று கிள்ளிவளவன் நயமாகச் சொன்னுன்; 8 தங்கள் பாடலேக் கேட்க அவையினர் மிக்க ஆவலாக இருக்கிறர்கள். இத்தனே பேரும் என்னே வானளாவப் புகழ்ந்துவிட்டார்கள். இவ்வளவு புகழையும் காங்கும் வன்மை எனக்கு இல்லை. நீங்களும் இவர்களோடு சேர்ந்து சுமையை அதிக மாக்கப் போகிறீர்களா?' என்ருன்.
அவர்கள் போன வழியிலே நான் போக மாட்டேன். உங்கள் சுமையைக் குறைக்கலா மென்றே எண்ணுகிறேன்" என்ருர் சப்பசலையார். புலவர்கள் சற்று விழித்தனர். நப்பசலையாரின் கருத்து அவர்களுக்கு விளங்கவில்லை.
நப்பசலையார் இப்போது புலவர்களே நோக்கிப் பேச ஆரம்பித்தார். இது காறும் நீங்கள் நம் மன்னருடைய புகழை விரிவாகப் பாடினிர்கள். அவர் இயல்புகளை யெல்லாம் எடுத்து எளிதிலே பாராட்டி விட்டீர்கள். எனக்கோ இப் பெருமானே இன்னபடி புகழ்வது என்று தோன்றவில்லை. உண்மையைச் சொல்லப் போனல், இவருக்குப்