பக்கம்:தமிழின் வெற்றி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5? தமிழின் வெற்றி பலம்ப கின்ற பாண்டியன் கதையை மன்னர்பிரான் அறிந்திருக்கலாமே. கடலானது அப் பாண்டிய மன்னனுடைய திருவடியை அலம்பியது. அப் பாண்டியனேயே கெடியோன் என்று புலவர்கள் சிறப்பிப்பார்கள். அந்தக் கடல் நீரை அகத்தியர் ஆசமனியம் செய்தார் என்ற வரலாற்றையும் மன்னர் அறிந்திருக்கலாம். ஆகவே பாண்டிய மன்னன் பதங் கழுவும் தண்ணிரைக் கும்பமுனி குடித்தார் என்பது நான் புதிதாகச் சொல்லும் செய்தியல்லவே!" என்று விடை கூறினர். -

பாண்டியன் மேலே ஒன்றும் சொல்ல இயலா மல் அன்பும் வியப்பும் தோன்றப் புலவரைப் பார்த்தான். s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/58&oldid=574823" இலிருந்து மீள்விக்கப்பட்டது