பக்கம்:தமிழின எழுச்சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 53

எந்தக்கட்சித் தலைவர்களும் குறியாய் இருப்பர் என்பதற்குப் புதுவையில் உள்ள தலைவர்களும் விலக்கல்லர். எனவேதான் புதுவையில் உள்ள கட்சித்தலைவர்கள் சிலரும் அரவிந்தர் பெயரில் அத்துணை நப்பாசை கொண்டுள்ளனர். திருவள்ளுவர் பெயரில் பாழியினரைப் போலும் கவர்ச்சியிருக்க வழியில்லைதான். ஆனால் புதுவை அல்லது பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகம் என்பதிலுமா கவர்ச்சியில்லை? இதுபற்றி மாணவர்களின் மெய்யான கோரிக்கையை ஏற்றுக்கொள்ள இவர்களுக்குத் தடையாயிருப்பது எது? என்பது நமக்கு விளங்கவில்லை .

இறுதியாக நாம் வேண்டுவதெல்லாம், மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள அரசினரும், அங்குள்ள கட்சித் தலைவர்களும் தக்க வழிவகைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்பதும், அங்குள்ள அரவிந்தப் பாழியினர் மேலும் மேலும் தம் சூழ்ச்சி வலைகளைப் புதுவை மண்ணில் பரப்பாதிருக்க அங்குள்ள பொதுமக்கள் தக்கக் கண்காணிப்புடன் நடந்து கொள்ளுதல் வேண்டும் என்பதுமே யாகும்.


தென்மொழி, சுவடி-9 ஓலை-5