பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தமிழியக்கம்

தமிழின்பேர் சொல்லி மிகு
    தமிழரிடைத் தமிழ் நாட்டில்
        வாழ்ந்திட் டாலும்
தமிழழித்துத் தமிழர் தம்மைத்
    தலை தூக்கா தழித்துவிட
        நினைப்பான் பார்ப்பான்.
அமுதாகப் பேசிடுவான்
    அத்தனையும் நஞ்சென்க
        நம்ப வேண்டாம்
தமிழர்கடன் பார்ப்பானைத்
    தரைமட்டம் ஆக்குவதே
        என்று உணர்வீர். 79

தமிழரின்சீர் தனைக்குறைத்துத்
    தனியொருசொல் சொன்னாலும்
        பார்ப்பான் தன்னை
உமிழ்ந்திடுக! மானத்தை
    ஒரு சிறிதும் இழக்காதீர்
        தமிழைக் காக்க
இமையளவும் சோம்பின்றி
    எவனுக்கும் அஞ்சாது
        தொண்டு செய்வீர்
சுமை உங்கள் தலைமீதில்
    துயர்போக்கல் உங்கள்கடன் !
        தூய்தின் வாழ்க! 80