கட்டு
இறந்தோர் உண்மையின் நன்னீர்க்
கங்கை ஆடப் போந்தேன்'
(சிலப்.27: 105-110)
கட்டு Kattu
(1) குறி - sign
'கட்டினும் கழங்கினும் வெறியென
இருவரும்' (தொல். 1061)
(2) குறி / குறிப்பு - sign, note
'குன்ற நாடன் பிரிவின் சென்று,
நல் நுதல் பரந்த பசலை கண்டு,
அன்னை செம் முது பெண்டிரொடு
நெல் முன் நிறீஇ, கட்டின்
கேட்கும் ஆயின்' (நற்.288: 4-7)
கட்டில் (cot) பார். 'அணை '
கடம்பு Katampu (a tree)
(1) கார்காலம் - rainy season
'கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி'
(நற்.34: 8-9)
(2) மீயாற்றல் - supernatural power
'அணங்குடைக் கடம்பின்
முழுமுதல் தடிந்து' (பதி.17: 4-5)
(3) இறைமை - divine
'ஆலமும், கடம்பும், நல் யாற்று
நடுவும், கால் வழக்கு அறுநிலைக்
குன்றமும், பிறவும், அவ்வவை
மேவிய வேறு வேறு பெயரோய்'
(பரி.4: 67-69)
(4) அழகு - beautiful
'உருள் இணர்க் கடம்பின் ஒலி
தாரோயே' (பரி.5: 81)
(5) புகழ் - fame
'புல வரை அறியாத புகழ் பூத்த
கடம்பு அமர்ந்து ' (பரி.19: 2)
(6) முதிர்வின்மை - youthfulness
'முந்நீரினுள் புக்கு மூவாக் கடம்பு
எறிந்தாள்' (சிலப். 17.31)
(ஆ) கடம்பு தடிதல் Katampu
tatital
(7) பகையொறுத்தல் - extricate enemy
இடம் கவர் கடும்பின் அரசு தலை
பனிப்ப, கடம்பு முதல் தடிந்த
கடுஞ்சின வேந்தே ' (பதி.12: 2-3)
(இ) கடப்பம் Katappam
கடல்
கார்காலம், இறைமை - winter,
god-hood
'கார்க்கடப்பம் தாரெங் கடவுள்
வருமாயின்' (சிலப்.24: 14.4)
கடல் Katal (sea)
(1) கருமை - black
'மால் கடல் திரையின் இழிதரும்
அருவி' (நற்.17: 2) |
(2) வலிமை - strength
'உரவுக் கடல் உழந்த பெரு வலைப்
பரதவர்' (நற்.63: 1)
(3) பேரளவு, காதல் - huge, large,
love
'காதல்தானும் கடலினும் பெரிதே'
(நற்.166: 10)
(4) ஒலி - sound
"எல் இமிழ் பனிக்கடல், மல்கு
சுடர்க் கொளீ இ' (நற்.67:8)
(5) விரிவு - broad, wide
'... .. .. .. .. விரி திரைக் கடல்
பெயர்ந்தனைய ஆகி' (நற்.259: 8-9)
(6) தண்மை / குளிர்ச்சி - cool
'திண் திமில் எண்ணும் தண் கடற்
சேர்ப்ப ' (நற்.331:8)
(7) வளமை - prosperity
'... .. .. .. முழங்கு கடல் திரை தரு
முத்தம் வெண் மணல் இமைக்கும்'
(ஐங்.105: 1-2)
(8) அளப்பருமை / ஆழம் -
unmeasurable / depth
'மகர மறி கடல் வைத்து நிறுத்து,
புகழ்சால் சிறப்பின்
இருதிறத்தோர்க்கும் அமுது கடைய'
(பரி. தி.1: 64-68)
(9) நிறையாமை - unfilling
'மண்டு நீர் ஆரா மலி கடல்
போலும் நின் தண்டாப் பரத்தை
தலைக்கொள்ள' (கலி. 73: 19-20)
(10) அழிவு - destroy
'மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல்
வௌவலின், மெலிவு இன்றி,
மேல்சென்று, மேவார் நாடு
இடம்பட' (கலி.104: 1-2)
(11) கடவுட்டன்மை , புனிதம்
divinity, holy
'பெருங் கடற்தெய்வம் நீர்
நோக்கித் தெளித்து, என்
திருந்திழை மென்தோள்