102
தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்
நீக்கமற நிறைந்துள்ளது. அவன் திருவருளால் நடைபெறும் படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் என்ற திருத்தொழில்கள் ஐந்தும் ஆருயிர்களின் நன்மையின் பொருட்டேயாகும். இவையனைத்தும் சிவசக்தியின் வாயிலாகவே அவன் செய்தருள்கின்றான். அம்மையும் அப்பனும் நுண்ணறிவு அம்பலமாம் திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கியிருக்கின்றனர். அதனால் எல்லாம் சிதம்பரமாகின்றது; அவன் செய்தருளும் திருக்கூத்தும் எங்கும் நிறைந்து காணப்பெறுகின்றது. எல்லா உயிர்களும் உலகங்களும் எல்லா உலகியற் பொருள்களும் அவனைச் சார்ந்தே நிற்கின்றன. சுருங்கக்கூறின், உலக மெல்லாம் சிவபெருமானின் திருக்கூத்தாகும். இதனால்தான் திருமூலரும் 'அம்பலமாவது அகில சராசரம்' என்றனர். இதனையே சிவஞான சித்தியாரும்,
உலகமே உருவ மாக
யோகிகள் உறுப்ப தாக
இலங்குபேர் இச்சா ஞானக்
கிரியையும் கரண மாக
அலகிலா உயிர்ப்பு லன்கட்(கு)
அறிவினை ஆக்கி ஐந்து
நலமிகு தொழில்க ளோடும் .
நாடகம் நடிப்பான் நாதன்5
என்று விளக்கியுரைக்கின்றது. இந்த அகிலம் முழுவதும் அணுத்தத்துவமாக மாறும் என்பதையும், மீண்டும் படைப்புக் காலத்தில் அஃது அண்டமாக வடிவெடுக்கும் என்பதையும் மெய்யுணர்வு பெற்ற தாயுமான அடிகள்,
செகத்தை யெல்லாம் அணுவளவும்
சிதறா வண்ணம்
சேர்த்து அணுவில் வைப்பை;அணுத்
திரளை யெல்லாம்
5. சிவஞான சித்தியார்-சுபக்கம்-237